Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானம் மேல் ரோட்டுல.. வாகனங்கள் கீழ் ரோட்டுல! – மதுரையில் புதிய திட்டம்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (12:35 IST)
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் காரணமாக விமான இறங்குதளத்திற்கு கீழ் ரிங்ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பிறகு அதிக போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கான இடம் கையகப்படுத்தல் பணி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கு தென் தமிழக மாவட்டங்களிலிருந்து மதுரை வரும் சுற்றுசாலை இடையூறாக உள்ளது.

இந்நிலையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யவும், போக்குவரத்து பாதை இடையூறை தவிர்க்கவும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி விரிவாக்கம் செய்யப்படும் பகுதியில் மேல் தளத்தில் ஓடு தளமும், கீழ்பகுதியில் அண்டர்பாஸ் வழிதடமாக ரிங்ரோடு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வாரணாசியில் மட்டும்தான் ஓடுதளத்திற்கு கீழ் இவ்வாறாக சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments