Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானம் மேல் ரோட்டுல.. வாகனங்கள் கீழ் ரோட்டுல! – மதுரையில் புதிய திட்டம்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (12:35 IST)
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் காரணமாக விமான இறங்குதளத்திற்கு கீழ் ரிங்ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பிறகு அதிக போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கான இடம் கையகப்படுத்தல் பணி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கு தென் தமிழக மாவட்டங்களிலிருந்து மதுரை வரும் சுற்றுசாலை இடையூறாக உள்ளது.

இந்நிலையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யவும், போக்குவரத்து பாதை இடையூறை தவிர்க்கவும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி விரிவாக்கம் செய்யப்படும் பகுதியில் மேல் தளத்தில் ஓடு தளமும், கீழ்பகுதியில் அண்டர்பாஸ் வழிதடமாக ரிங்ரோடு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வாரணாசியில் மட்டும்தான் ஓடுதளத்திற்கு கீழ் இவ்வாறாக சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments