Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடி வெடிக்க தடை; புஷ்வானம், மத்தாப்பு ஓகே! – மும்பை மாநகராட்சி உத்தரவு!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (12:20 IST)
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மும்பை மாநகராட்சி தளர்வுகளுடன் கூடிய தடையை அறிவித்துள்ளது.

இந்தியாவில் தீபாவளி நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் முற்றிலுமாக தடை விதித்தன. அதை தொடர்ந்து தற்போது டெல்லிக்கும் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்தியாவில் காற்று மாசுள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பட்டாசு வெடிக்க தளர்வுகளுடன் கூடிய தடையை விதித்துள்ளது மும்பை மாநகராட்சி. அதன்படி மும்பையில் சத்தத்துடன் வெடிக்கும் அனைத்து பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தமில்லாத புஷ்வானம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளை இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் வெடித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments