Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Advertiesment
highcourt

Mahendran

, புதன், 18 ஜூன் 2025 (18:08 IST)
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் போதுமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துச் சீல் வைத்தது சட்ட விரோதம் என இவர்கள் இருவரும் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களுக்கான சீல் அகற்றப்படும் என்றும், அங்கிருந்து கைப்பற்றிய பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதிலளித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!