Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி விவகாரத்தில் குஷ்பு குழப்பம் விளைவிக்கின்றார்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (15:34 IST)
தடுப்பூசி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை சைதாப்பேட்டையை எடுத்து சின்ன மலை பகுதியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசும் போது இதனை அவர் கூறினார். தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதன் அவசியத்தை விளக்கிய அமைச்சர் சுப்பிரமணியன், கடந்த ஆட்சியில் வீணடிக்கப்பட்ட அளவையும் சமன் செய்யும் வகையில் திமுக ஆட்சியில் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக கூறினார் 
 
புள்ளி விவரத்தை வெளியிட தயார் எனக் கூறிய அமைச்சர் சுப்ரமணியன் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை மத்தியஅமைச்சரே பாராட்டி இருக்கும் விவரம் அறியாமல் எடப்பாடி பழனிசாமி, குஷ்பு ஆகியோர் பொய்க்குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
முன்னதாக தமிழக அரசு ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை வீணாக்கியதாக குஷ்பூ குற்றம் சாட்டி இருந்தார் என்பதும், இதே குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments