Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்! இடிக்க உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம்!

Prasanth Karthick
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:53 IST)

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகளை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

 

 

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகள் இயற்கை எழில்மிக்கவை, மட்டுமல்லாமல் யானைகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் மலைவாசஸ்தலங்களுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் புதிதாக பல பகுதிகளில் விடுதிகள் கட்டப்படுகின்றன. 

 

அவ்வாறாக யானைகள் செல்லும் வழித்தடத்தில் விதிகளை மீறி விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி 35 தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 15 நாட்களுக்குள் உரிய உரிமம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள விடுதிகளை இடித்து அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments