Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்ட நெரிசலை தவிர்க்க இ-பாஸ் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

கூட்ட நெரிசலை தவிர்க்க இ-பாஸ் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

J.Durai

, செவ்வாய், 7 மே 2024 (11:13 IST)
ஊட்டியில் வருகிற 10-ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து இன்று 7-ம் தேதி முதல் இ - பாஸ் பெற்று வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
 
தமிழக கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகள் இணையும் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, கக்கநல்லா, பாட்டவயல், சோலாடி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் ஐ பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என ஆர்டி ஓ செந்தில்குமார் தலைமையில் வருவாய் துறையினர் போலீசார் ஆய்வு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.
 
இதேபோல் கோவையில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பர்லியாறு சோதனை சாவடியில் ஆய்வு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 
 
இ பாஸ் தராத சுற்றுலா பயணிகள் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு இ-பாஸ் பெற்ற பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு!