Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. ஆனால் சென்னை தப்பித்தது..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (17:49 IST)
வங்க கடலில் சமீபத்தில் ஏற்பட்ட  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் சென்னைக்கு இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக எந்த விதமான ஆபத்தும் இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
அரபிக் கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் திருச்சி, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை உள்பட வடக்கு மாவட்டங்களில் பெரிய மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு  அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும். மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை பகுதியிலும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments