பெற்றோர் எதிர்ப்பு - விஷம் குடித்து தற்கொலை செய்த காதலர்கள்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (11:49 IST)
பெற்றோர் காதலுக்கு சம்மதிக்காததால் காதலர்கள் ஒரே நேரத்தில் செல்போனில்  பேசிக் கொண்டே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டம் அச்சமங்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக், பாரதி. இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் பாரதிக்கு அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், தங்கள் காதல் கைக்கூடாது என மனமுடைந்து போன இருவரும் தங்களின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நிகழாதிருக்கும் வகையில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால முடியலை.. JEE தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

கிறிஸ்துவ நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின்

5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.2500.. பேச்சுலர்கள் கடும் அதிர்ச்சி..!

கொல்கத்தா வரை தாக்குதல் நடத்துவோம்.. பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை.. இந்தியா ரியாக்சன் என்ன?

ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைதா? குடும்பத்தினர் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்