Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்பார்வை இழந்தவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க கோரிக்கை

கண்பார்வை இழந்தவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க கோரிக்கை

கண்பார்வை இழந்தவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க கோரிக்கை
, சனி, 25 ஜூன் 2016 (15:13 IST)
மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் கண்பார்வை இழந்தவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என கொஜக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 23 பேருக்கு செய்யப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சையால் 16 பேர் கண்பார்வை இழந்துள்ளனர். இதில் கூலிவேலை செய்வோர்கள் மற்றும் ஏழை,எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சிகிச்சையளிக்க உயர்மட்டக்குழு அரசு அமைத்தாலும்,கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமாக ரூ.25 இலட்சம் உடனே வழங்க வேண்டும். கண்பார்வை பாதிக்கப்பட்டவருக்கான காரணத்தை கண்டறிந்து, தவறு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மேலும், மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கான மருத்துவசெலவை அரசே ஏற்க வேண்டும் அக்கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானும் நீக்குவேண்டா - வைகோ ஆவேசம்