Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை காலதாமதம் ஆகும் என தகவல்!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (07:47 IST)
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்க காலதாமதம் ஆகும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
முதலில் பதிவான வாக்கு பதிவு பெட்டியில் உள்ள வாக்குச் சீட்டுகள் முழுமையாக கொட்டப்படும். அதில் 4 வண்ணங்களில் உள்ள வாக்குச் சீட்டுகள் தனிதனியாக பிரிக்கப்படும். வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஐம்பது ஐம்பதாக பண்டல் செய்யப்படும்
 
அதன்பிறகு வாக்காளர் பட்டியல், வாக்கு பதிவு செய்தோர் பட்டியல் சரிபார்க்கப்படும். அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கான ஆர்.ஓ கடிதம் அளிப்பார். அதன்பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்
 
எனவே காலை 8 மணிக்கு முதல் இந்த வாக்கு எண்ணும் நடைமுறைகள் தொடங்கும் என்பதால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்காது என்றும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்கு எண்ணிக்கை காலதாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் முதல்கட்ட முடிவு காலை 9 மணிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments