Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி சுதீஷ் கையில் அதிகாரம்: பட்டும் திருந்தாத பிரேமலதா!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:58 IST)
உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைத்ததுள்ளதாக அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக. 
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக  அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக   விருப்ப மனு விநியோகம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக விருப்பமனு விநியோகத்தை துவங்கியுள்ளது. 
 
இதனை தொடர்ந்து தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு விநியோகத்தை துவங்கியது. தேமுதிக தலைவர் விஜய்காந்த் விருப்பமனுக்களை வழங்கினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எல்.கே.சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்த குழுவுக்கு சுதீஷை தலைமையாக போட்டது கட்சிக்குள் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். 
 
கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக, திமுக என இரு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் சுதீஷ். அதன் பின்னர் அதிமுகவிடம் கேட்டது கிடைக்காமல் கொடுத்தை வைத்து கூட்டணி அமைத்தது தேமுதிக. 
 
எனவே இந்த முறையும் அவர் பொறுப்பாக செயல்படுவாரா என்பதற்கு உத்திரவாதம் இல்லாமல் அவரது தலைமையில் தொகுதி பங்கீடு வேலைகளை விட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments