திமுக கோடீஸ்வரர்களின் கட்சி – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் !

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:42 IST)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த  உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிமுக விருப்பமனு விநியோகத்தை துவங்கியுள்ளது.

மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.25,000, நகராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.10,000, வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, பேரூராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.500 என அதிமுக நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஏழைகளின் கட்சி எனவும் திமுக கோடீஸ்வரர்களின் கட்சி எனவும் பேசினார். திமுக மேயர் பதவிக்கான விருப்பமனுக் கட்டணமாக 50000 ரூ என அறிவித்துள்ளது. இதைக் குறிப்பிடும் விதமாக அவர் பேசி அவர் திமுகவை சீண்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கிங் மேக்கர் இல்லை.. நிச்சயம் ஆட்சி அமைப்பேன்: விஜய் முதல்முறையாக ஊடகத்திற்கு அளித்த பேட்டி..

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.. செங்கோட்டையன்

கல்லூரிகளில் கல்விக்கட்டணம் ரத்து.. இலவச கல்லூரி கல்வி வழங்கும் முதல் மாநிலம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 4.25 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய நிலையில் எத்தனை பேர் பாஸ்?

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments