Publish Date: Thu, 16 Sep 2021 (06:45 IST)
Updated Date: Thu, 16 Sep 2021 (07:23 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் செப்டம்பர் 25ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. செப்டம்பர் 23ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் தெரிவிக்கப்பட்டிருந்தது
9 மாவட்ட தேர்தல் நடக்கும் மாவட்டங்கள் பின்வருமாறு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்டம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
siva
Publish Date: Thu, 16 Sep 2021 (06:45 IST)
Updated Date: Thu, 16 Sep 2021 (07:23 IST)