Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 27 April 2025
webdunia

தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும்- வானதி சீனிவாசன்

Advertiesment
BJP
, சனி, 22 அக்டோபர் 2022 (14:53 IST)
தீபாவளி பண்டிகைக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை  தீபாவளி. இப்பண்டிகைக்கு அனைவரும் புத்தாடை உடுத்தி, கோயில்களுக்குச் சென்று சாமியை வழிபடுபவர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான இதற்கு அரசு விடுமுறை தினமாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.

‘’தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்துவைப்பது இளம் விதவைகளை அதிகரிடத்து வருகின்றது ‘’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்: மத்திய அரசு உத்தரவு