Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளையாய் பிறந்த குழந்தைகள்; சந்தேகத்தில் மனைவியை கொன்ற டிரைவர்!

வெள்ளையாய் பிறந்த குழந்தைகள்; சந்தேகத்தில் மனைவியை கொன்ற டிரைவர்!
, திங்கள், 20 ஜூலை 2020 (10:39 IST)
மயிலாடுதுறை அருகே மனைவியின் நடத்தையை சந்தேகப்பட்டு டிரைவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். கார் ஓட்டுனராக பணிபுரியும் இவர் 8 ஆண்டுகளுக்கு முன்னால் அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஐயப்பன் கருமை நிறம் கொண்டவராய் உள்ள நிலையில் அவரது குழந்தைகள் வெள்ளையாய் இருந்ததை தொடர்ந்து சந்தேகம் கொண்டு வந்திருக்கிறார் ஐயப்பன். இதனால் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமையன்று அகிலா அவரது வீட்டில் மயங்கி கிடப்பதாக அதே கிராமத்தில் வசிக்கும் அகிலாவின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்று அகிலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அகிலா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஐயப்பனுக்கும், அகிலாவுக்கும் இடையே தகராறு இருப்பது அகிலாவின் பெற்றோருக்கு தெரியுமென்பதால் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஐயப்பனை விசாரிக்கையில் மதுபோதையில் கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றதாக ஐயப்பன் ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தைகள் தன் நிறத்தில் இல்லாததால் மனைவி நடத்தை மீது சந்தேகம் கொண்டு கொலை செய்ததாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பீதியை மீறி திறக்கப்பட்ட திருப்பதி கோவில்! – அர்ச்சகர் உயிரிழப்பு!