Publish Date: Thu, 03 Mar 2022 (18:11 IST)
Updated Date: Thu, 03 Mar 2022 (18:14 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்களை ஏலம் விடுவது போல ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான ஏலம் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான ஏலம் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் இதில் லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதற்கு பள்ளி கல்வித்துறை செயலர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது