விவசாயிகளை தொடர்ந்து வன ஊழியரையும் தாக்கிய சிறுத்தை! – தீவிர தேடுதல் வேட்டை!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (12:45 IST)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சோளக்காட்டில் பதுங்கிய சிறுத்தை வன ஊழியரையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பாப்பாகுளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாறன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விளைவித்திருந்த சோளத்தை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வயல் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து மாறனை தாக்கியுள்ளது.

மாறன் அலறியதை கேட்டு உதவிக்கு வந்த மேலும் இரு விவசாயிகளையும் சிறுத்தை மூர்க்கமாக தாக்கி தப்பியுள்ளது. அதை தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டபோது சோள வயலில் பதுங்கியிருந்த சிறுத்தை வன ஊழியர் ஒருவரையும் தாக்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் வன ஊழியர்கள், கும்கி யானையை கொண்டு வந்து சிறுத்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நின்னவர்தான் விஜய்! ‘ஜனநாயகன் பிரச்சினை குறித்து சரத்குமார் காட்டம்

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments