இடைத்தேர்தல் வேட்புமனு வாபஸ் – இன்றே கடைசி !

Webdunia
வியாழன், 2 மே 2019 (11:37 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் இந்த தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா எனும் நிலைமையில் உள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகள் தீயாய் வேலைப்பார்த்து வருகின்றனர். வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் வேட்புமனுப்  பரிசீலனை நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற இன்றேக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களின் சம்பளம் ரூ.2500 அதிகரிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

விரதம் இருந்தால் புற்றுநோய் குணமாகுமா? அண்ணாமலையை கலாய்க்கும் மருத்துவர்கள்..!

பகுதி நேர ஆசியர்களின் ஊதியம் 15 ஆயிரமாக உயர்வு!.. அன்பில் மகேஷ் அறிவிப்பு...

முன்பதிவில்லா டிக்கெட்டுகள் எடுப்பவர்களுக்கு 3% தள்ளுபடி.. ஆனால் இதை செய்ய வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments