சென்னையின் 16 சட்டமன்ற தொகுதியில் மகளிர் மட்டும் வாக்குச்சாவடி.. அனைத்தும் பிங்க் நிறம் தான்..!

Mahendran
வியாழன், 18 ஏப்ரல் 2024 (13:36 IST)
பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று  அமைக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் மட்டும் இருக்கும் இந்த பிங்க் வாக்குச்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிங்க் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியோருக்கு என தனித்தனி வரிசை அமைக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
 
இந்த பிங்க் நிற மகளிர் மட்டும் வாக்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் இன்னும் அதிகளவில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments