Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோட்டாவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம்.. சத்குரு ஜக்கி வாசுதேவ்

நோட்டாவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம்.. சத்குரு ஜக்கி வாசுதேவ்

Mahendran

, வியாழன், 18 ஏப்ரல் 2024 (10:10 IST)
நோட்டாவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும், நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாக்காளர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது சமூக வலைத்தளத்தில் நோட்டாவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்றும் ஜனநாயக முறையில் வாக்களிக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் நாட்டை யார் வழி நடத்துவார்கள் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை கையிலெடுக்க வேண்டும். ஜனநாயக செயல் முறையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் சக்தியை வீண் போக விடாதீர்கள் அல்லது நோட்டாவை தேர்ந்தெடுத்து 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் எதிர்காலத்தை கட்டமைக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள்’ என சத்குரு கேட்டுக்கொண்டார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 நாட்கள் டாஸ்மாக் லீவ்.. மொத்தமாக சரக்கை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்! – ஒரு நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?