Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... குற்றாலத்தில் 28 ஆண்டுகள் இல்லாத நிகழ்வு !!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (10:32 IST)
28 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. 
 
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன. சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் என 67-க்கும் அதிகமான நீர்நிலைகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவில் தண்ணீர் செம்மண் நிறத்தில் பாதுகாப்பு வளைவு மற்றும் தடாகத்தை தாண்டி பாலம் வரை கொட்டுகிறது. இது கடந்த 28 வருடங்களில் இல்லாத நிகழ்வாகும். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments