Publish Date: Thu, 20 May 2021 (07:36 IST)
Updated Date: Thu, 20 May 2021 (07:38 IST)
இந்திய மக்களைப் கொரோனாவில் இருந்து காப்பாற்றுவதற்கு பதிலாக பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்திலேயே குறியாக இருக்கிறார் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூபாய் 25 லட்சம் கொரோனா தடுப்பு நிதி அளித்தார். அதன்பின்னர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடியின் மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் காங்கிரஸ் ஆட்சி எந்தெந்த மாநிலங்களில் இருக்கிறதோ அந்த மாநிலங்களில் எப்போது கவிழ்க்கலாம் எப்படி தடுக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்
மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்றும் ஒருமித்த கருத்துடன் சட்டமன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கேள்வி ஒன்றுக்கு கே எஸ் அழகிரி பதில் அளித்தார்