Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 20 April 2025
webdunia

திமுக ஆட்சிக்கு அவகாசம் குடுங்க.. நிச்சயம் நல்லாட்சி தருவாங்க! – கே.எஸ்.அழகிரி உறுதி!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 22 ஜூன் 2021 (10:48 IST)
திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆளுனர் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் ஆளுனர் அறிவிப்புகள் திருப்தி அளிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “வரியை எதில் குறைப்பது, எதில் அதிகரிப்பது, மாநில அரசின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பவற்றை ஆலோசிக்கதான் ரகுராம் ராஜன் போன்ற மிக சிறந்த பொருளாதார ஆலோசகர்களின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. கண்டிப்பாக திமுக தமிழகத்தில் நல்லாட்சி வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்நிய முதலீட்டை அதிகம் ஈர்த்த நாடுகள்; 5வது இடத்தில் இந்தியா! – ஐ.நா தகவல்!