Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா ஒரு செத்த பாம்பு.. கட்சி கூட்டத்தில் ஆவேசமாக பேசிய கேபி முனுசாமி..!

Siva
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (11:42 IST)
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக கூட்டம் நடந்தபோது அதில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறிய போது சசிகலா ஒரு செத்த பாம்பு அவரைப் பற்றி இங்கு பேசக்கூடாது என கேபி முனுசாமி ஆவேசமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரையும் சேர்க்காவிட்டால் பரவாயில்லை அவர்களுடைய ஆதரவாளர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று கட்சி நிர்வாகிகள் கூறிய போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்று கேபி முனுசாமி கூறினார். 
 
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இல்லை என்பதால் தான் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நின்ற போது கூட அதிமுக அதிக வாக்குகள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் கேபி முனுசாமி கூறியுள்ளார் 
 
2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments