Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்படுகிறது கோயம்பேடு சந்தை: பிரதமர் உரையை தொடர்ந்து முடிவு!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (08:38 IST)
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுகிழமை கோயம்பேடு சந்தையை மூட முடிவெடுத்துள்ளனர் வியபாரிகள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இரண்டாம் நிலையில் உள்ள கொரோனா பரவலை மூன்றாம் நிலைக்கு முன்னேறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக நேரடியாக பேசிய பிரதமர் மோடி வருகின்ற 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றான சுய தனிமைப்படுத்திக் கொள்ளலை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் விதமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படாது என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments