Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி சொல்லுங்கள் - பிரதமர் மோடி

மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி சொல்லுங்கள் - பிரதமர் மோடி
, வியாழன், 19 மார்ச் 2020 (20:52 IST)
மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி சொல்லுங்கள் - பிரதமர் மோடி
 

கொரோனா வைரஸை மக்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என  பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மார்ச் 22 ல் மாலை 5க்குள் வீட்டின் நுழைவாயிலில் நின்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். பணிக்கு வரவில்லை ஊதியத்தை குறைக்காதீர்.22 ஆம் தேதி கொரோனா வைரஸூக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.மருத்துவர்களுக்கு கைத்தட்டல்கள்,மணியோசை எழுப்பி உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.
 
கொரோனாவொடு போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ சேவைக்கு மேலும் அதிக பளுவை ஏற்றக்கூடாது. அதிலும் மருத்துவமனைகளில் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்தக் கொரானா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு என தெரிவித்துள்ளார்.
 
கொரோனாவை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்தியர்கள் மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவைரஸை எதிர்கொள்ள வேண்டும்.
 
அறுவை சிகிச்சைகாக நேரம் தேர்வு செய்திருந்தால் அதை தள்ளிப்போடுவது சிறப்பாக இருக்கும். இந்த கொரோனா வைரஸ் உலகப் போர் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனா வைரஸால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் அதை தவிர்க்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூண்டில் மனிதர்கள், சுதந்திரமாக விலங்குகள்: புதுச்சேரி கவர்னரின் கொரோனா டுவீட்