Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோபாலபுரத்தில் மண்டியிட்டு கதறி அழுத கே.என்.நேரு: என்னவா இருக்கும்??

கோபாலபுரத்தில் மண்டியிட்டு கதறி அழுத கே.என்.நேரு: என்னவா இருக்கும்??
, செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:51 IST)
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார் கே.என்.நேரு.
 
தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இதுவரை இருந்த டி.ஆர்.பாலு தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நாடாளுமன்ற குழுத்தலைவராக உள்ளார் என்பதால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் டி.ஆர்.பாலு வகித்து வந்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
 
தற்போது திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் கே.என்.நேரு இருபப்தால் திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வேறொருவருக்கு வழங்கப்படும் என்றும் தெரிகிறது. 
 
இந்நிலையில் இன்று தனது நண்பர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று கருணாநிதி புகைப்படம் முன்பு கதறி அழுதிருக்கிறார் கே.என்.நேரு. ஆனால், கே.என்.நேருவின் கண்ணீருக்கான காரணம் என்னவென்றுதான் அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவிலிருந்து வந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை..