Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு மாநிலங்களில் அரசு மரியாதை… கி ராவுக்கு கிடைத்த அங்கிகாரம்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (16:19 IST)
தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான கி ராஜநாரயணன் இன்று தனது 98 ஆவது வயதில் உயிரிழந்தார்.

கரிசல் பூமியில் இடைச்செவல் எனும் கிராமத்தில் பிறந்தவர் எழுத்தாளர் கி ரா. பள்ளிப்படிப்பு பெரிய அளவில் இல்லாத நிலையில் அனுபவப் படிப்பின் மூலமே எழுத வந்தவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பல நூல்களை எழுதியவர். இவரின் கோபல்ல கிராமம் புத்தகத்திற்காக சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது. அதையடுத்து புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நியமிக்கப்பட்ட கி ரா. அங்கேயே வசிக்க ஆரம்பித்தார். இந்தியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக தன்னுடைய 96 ஆவது வயதில் நாவல் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

இந்நிலையில் தனது 98 ஆவது வயதில் இன்று காலை அவர் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். அவர் உடலுக்கு தமிழக அரசு அரசு மரியாதை செலுத்தும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது புதுச்சேரியில் அரசு மரியாதையோடு அவரின் உடல் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்துக்கு புறப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் இடைச்செவலில் கி ரா வுக்கு சிலை அமைக்கப்படும் என மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments