Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் பயத்திலிருந்து வெளியே வரவேண்டும்; குஷ்பு வருத்தம்

காங்கிரஸ் பயத்திலிருந்து வெளியே வரவேண்டும்; குஷ்பு வருத்தம்

Arun Prasath

, புதன், 12 பிப்ரவரி 2020 (14:32 IST)
காங்கிரஸ் கட்சி பயத்திலிருந்து வெளியே வரவேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இது குறித்து குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நாம் இப்போதே நமது பயணத்தை தொடரவேண்டும். இது செயலுக்கான நேரம்,  “நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறி விடு” என்ற மகாத்மா காந்தியின் மொழிகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் நம்மை மாற்றிக்கொள்வதற்கான தேவை உள்ளது. நாம் நமது பயங்களிலிருந்து வெளியே வரவேண்டும், நாம் நிச்சயாமாக இதனை செய்யவேண்டும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு – வியாபாரிகள் அதிர்ச்சி!