Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: தாம்பரம் அருகே பரபரப்பு.!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (10:55 IST)
தாம்பரம் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு நடந்துள்ள நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தாம்பரம் அருகே பள்ளிக்கரணை என்ற பகுதியில் மதனகோபால் என்ற பாஜக  கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் வாழ்ந்து வருகிறார். நேற்று மாலை 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் வந்த நிலையில் அவரது வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் குடு வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு காரணமாக பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து  மதனகோபால் மற்றும் அவருடைய உறவினர்களிடம் விசாரித்தனர். அவருடைய வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments