Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தில் கரையை கடந்தது 'ஹமூன்' புயல்: மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (10:49 IST)
வங்க கடலில் உருவான 'ஹமூன்' புயல் வங்கதேசத்தில் கரையை கடந்து விட்டதாகவும் இதனை அடுத்து வங்கதேச மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  
 
மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்து தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 'ஹமூன்'  என்ற புயலாக மாறியது. இந்த புயல் இன்று காலை ஐந்து முப்பது மணி நிலவரப்படி வங்கதேசத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. 
 
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து சற்றுமுன் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  புயல் கரையை கடந்தாலும் இன்று மாலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் புயல் காரணமாக 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments