Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வழியாக செல்லும் கேரள ரயில்கள் நிறுத்தமா?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:28 IST)
கேரளாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் வழியாக செல்லும் கேரளா ரயில்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
 
கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளை தமிழக ரயில்வே நிலையத்தில் கண்காணிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது. ரயில்வே நிலையத்தில் குறைந்த அளவில் ஊழியர்கள் மட்டுமே இருப்பதால் கேரளாவிலிருந்து வரும் ரயில் பயணிகள் அனைவரிடமும் பரிசோதனை செய்வது சவாலாக இருக்கிறது என்று ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் தமிழக மற்றும் கேரள மாநில அரசுகள் இது குறித்து ஆய்வு செய்து தமிழகம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அல்லது தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன
 
தமிழக அரசு தங்கள் மாநில எல்லைக்குள் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்று தெரிவித்தால் அங்கு ஸ்டாப்பிங் அளிக்கப்படாது என்றும் தமிழக அரசின் அறிவிப்பை பொருத்தே எங்கள் செயல்பாடு இருக்கும் என்றும் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments