Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நிறைவு பெறுகிறது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள். அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (07:05 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த போட்டிகள் நிறைவடைகிறது. இன்றைய இறுதி நாளில் சில போட்டிகள் நடைபெற்ற பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தொடங்கி வைத்தார் என்பதும் இந்த விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு அணி மிக சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றைய கேலோ  இந்தியா போட்டி  சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேலோ கேள்வி இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. 
 
இன்றைய இறுதி நாளில் கால்பந்து, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று மாலை ஆறு மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு விழா நடைபெற உள்ளது. 
 
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments