Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நிறைவு பெறுகிறது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள். அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (07:05 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த போட்டிகள் நிறைவடைகிறது. இன்றைய இறுதி நாளில் சில போட்டிகள் நடைபெற்ற பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தொடங்கி வைத்தார் என்பதும் இந்த விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு அணி மிக சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றைய கேலோ  இந்தியா போட்டி  சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேலோ கேள்வி இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. 
 
இன்றைய இறுதி நாளில் கால்பந்து, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று மாலை ஆறு மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு விழா நடைபெற உள்ளது. 
 
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments