Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.700 கோடி: தமிழக அரசு ஒதுக்கியது!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:50 IST)
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழக அரசால் 14 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக 700 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் காரணமாக கரூர், திருச்சி, புதுகை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் தமிழக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீண்ட நாள் கனவாக இருந்த காவிரி குண்டாறு திட்டத்திற்கு முதல் கட்டமாக 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தமிழக மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments