Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழைப்பு விடுத்த எடப்பாடியார்; தமிழகம் வரும் பிரதமர்! – சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அழைப்பு விடுத்த எடப்பாடியார்; தமிழகம் வரும் பிரதமர்! – சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
, ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:33 IST)
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் பிப்ரவரி 14ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தபோது தமிழகத்தில் சில திட்டங்களை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பல திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் பாதிப்பு நிலவரம்!