Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலியோ சொட்டுமருந்து முகாம்! தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு!

போலியோ சொட்டுமருந்து முகாம்! தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு!
, ஞாயிறு, 31 ஜனவரி 2021 (09:31 IST)
கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
Polio

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்ட நிலையில் இன்று இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் சொட்டு மருந்து வழங்கப்படுவதுடன், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், சோதனை சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் சொட்டு மருந்து முகாம் ஏற்படுத்தப்பட்டு சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் சற்று நேரத்தில் சசிகலா டிஸ்சார்ஜ்: சென்னை வருவது எப்போது?