வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்துப்பட்டியல் - 58.44 கோடியா ?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (11:45 IST)
வேலூர் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கதிர் ஆனந்தின் சொத்து மதிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார் தீபலஷ்மி.

நேற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவில் அவரது சொத்துமதிப்புப் பற்றிக் கூறியுள்ளார். அதில் தனக்கும் தனது மனைவி சங்கீதாவுக்கும் ரூ.58,43 ,82 ,767 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ள ஆவணங்களில் வங்கிகளில் கையிருப்புத் தொகையாக ரூ19,03,16,000-ம், தனது மனைவியின் வங்கிக்கணக்கில் 8,083,879 ரூபாயும் உள்ளாதத் தெரிவித்துள்ளார். அதேப்போல 3.664 கிலோ தங்கமும்  3 காரட் வைரமும், 31.702 கிலோ வெள்ளியும் உள்ளதாகவும், தன் மனைவி சங்கீதா கையிருப்பில் 1,003 கிராம் தங்கம், 1.5 காரட் வைரம், 10.868 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அமெரிக்க மாகாண ஆளுனர், அட்டர்னி ஜெனரல் தேர்தல்.. டிரம்ப் கட்சி படுதோல்வி..!

Gen Z எனப்படும் இளைஞர்கள் ஜனநாயகத்தை மீட்டெடுப்பார்கள்: ராகுல் காந்தி நம்பிக்கை..!

மகாத்மா காந்தியின் 3 குரங்குகள்.. ராகுல், அகிலேஷ், தேஜஸ்வியை விமர்சித்த யோகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments