Publish Date: Wed, 22 Jan 2020 (20:35 IST)
Updated Date: Wed, 22 Jan 2020 (20:37 IST)
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அஜித் ரசிகர்களுடன் காரசாரமாக மோதிக்கொண்ட நடிகை கஸ்தூரி தற்போது தனது கவனத்தை வைகோ பக்கம் திருப்பியிருக்கிறார்
இன்று காலை வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது ’தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்
இதனை அடுத்து நடிகை கஸ்தூரி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: யுனெஸ்கோவும் யுனெஸ்கோ மன்றமும் ஒன்றா? யுனெஸ்கோ மன்றம் ஒரு திராவிட சித்தாந்த அமைப்பு. அதற்கும் ஐநாவுக்கு சம்பந்தமே இல்லை. இதை வைகோ அவர்கள் தெளிவுபடுத்தி இருக்க வேண்டாமா? மற்றவரை குறை சொல்பவர்கள் பிழையில்லாமல் பேசவேண்டாமா? என்ற ஒரு சாட்டையடி கேள்வியை தனது டுவிட்டரில் எழுப்பியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இதற்கு வைகோ பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்