Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபிஐ விசாரித்தாலும் அருணா ஜெகதீசன் விசாரணையும் தொடரும்: வழக்கறிஞர் வில்சன் பேட்டி..!

Advertiesment
TVK Vijay karur

Mahendran

, திங்கள், 13 அக்டோபர் 2025 (13:37 IST)
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு நியமித்த அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார்.
 
விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
உச்ச நீதிமன்ற வளாகத்தில் பேசிய வில்சன், "கரூர் நெரிசல் வழக்கில் தமிழக அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தொடரும்" என்று உறுதி அளித்தார். தவறு யார் மீது என்பதை இந்த ஆணையம் கண்டறியும் உரிமை உள்ளது.
 
மேலும், சிபிஐ விசாரணைக்கான உத்தரவு இடைக்காலமானதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.
 
உயர் நீதிமன்ற உத்தரவில் அரசு தலையிட்டதாக த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் வில்சன் கண்டனம் தெரிவித்தார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டாலும், சம்பவம் நடந்ததற்கான காரணத்தை கண்டறிய தமிழக அரசின் ஆணையமும் தொடர்ந்து செயல்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேபாள சிறையில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோட்டம்.. அதில் 540 கைதிகள் இந்தியர்கள்.. அதிர்ச்சி தகவல்..!