Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் நிதிநிலை அறிக்கை தாக்கல்

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (22:19 IST)
2023 - 24ஆம் ஆண்டுக்கான கரூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் கவிதா கணேசன் தாக்கல் செய்தார் - சுமார் 2 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்.
 
கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கும், அவசரக் கூட்டம் 10.30 மணிக்கும் நடைபெற்றது. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 2023 24 ஆம் ஆண்டுக்கான கரூர் மாநகராட்சி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையை மேயர் கவிதா கணேசன் எடுத்து வந்தார். 
 
2023 - 24 ஆம் ஆண்டுக்கான பொது நிதியாக 173.36 கோடியும், குடிநீர் வடிகால் நிதியாக 132.50 கோடியும், ஆரம்பக் கல்வி நிதியாக 7.12 கோடியும் செலவினங்களாக தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வரவு 311.46 கோடியும், மொத்த செலவினங்களாக 313.98 கோடி ரூபாயும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சியில் கூடுதலாக சுமார் 2 கோடி அளவில் பற்றாக்குறை பட்ஜெட்டை மேயர் கவிதா கணேசன் தாக்கல் செய்தார்.
 
மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments