Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையிலும் டெங்கு ஆய்வு - கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் அசத்தல்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (16:03 IST)
தமிழக அளவில் டெங்கு ஒழிப்பில் தீவிரமாக களமிறங்கி வருபவர் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ்.


 

கரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மற்றும் செயல்முறை, ஆங்காங்கே செல்லுமிடமெல்லாம், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருவதோடு, நீண்ட நாட்காளாக கரூர் மக்களின் குறைகளாக இருந்த இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியையும் கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் தொடக்கி வைத்ததோடு, அப்பணியை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். 
 
இந்நிலையில் அன்று முதல் இன்று வரை தினந்தோறும்., டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தவும், டெங்கு கொசுக்கள் உருவாகின்றதா, இல்லையா என நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வரும் கோவிந்தராஜ் தினந்தோறும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் டெங்கு குறித்த கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார். 
 
இந்நிலையில் இன்று கரூர்  நகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் மற்றும் ஈஸ்வரன் கோவில்  பகுதிகளில்  டெங்கு தடுப்பு பணிகளை  கோவிந்தராஜ்ஆய்வு செய்தார். ,டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறித்து. அங்கிருந்த டயர்களை அப்புறபடுத்த உத்தரவிட்டார். கோவில் அருகே இருந்த கடைகளில் கொசு அண்டாத வகையில் சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார். 
 
கொட்டும் மழையிலும் குடை கூட இல்லாமல் டெங்கு ஆய்வு மேற்கொண்டு வரும் கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜின் செயல் இப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments