Publish Date: Thu, 11 Feb 2021 (10:46 IST)
Updated Date: Thu, 11 Feb 2021 (10:48 IST)
சசிக்கலா விடுதலையாகி சென்னை திரும்பியுள்ள நிலையில் எம்.எல்.ஏ கருணாஸ் மற்றும் தனியரசு அவரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் சசிக்கலாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் சசிக்கலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பிரேமலதா விஜ்யகாந்தும் சசிக்கலாவை சந்திக்க உள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சசிக்கலாவை சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.