Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன தொட்டா, தட்டி கேக்க நாளு பேர் வரனும்: கருணாஸ் மாஸ்டர் ப்ளான்!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (16:59 IST)
நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சில பல திட்டங்களோடு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். 
 
ஏற்கனவே, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார். நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளாராம்.
 
அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி சீமான், கம்யூனிஸ்ட் தலைவர்கள், முத்தரசன், பாலகிருஷ்ணன், மற்றும் சில தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். கருணாஸ் இப்படி அனைவரை சந்திக்க காரணம் என்ன என விசாரித்த போது, பின்வருமாறு பதில் கிடைத்தது. 
 
அரசுக்கு எதிராக கருணாஸ் பேட்டி அளித்ததால், அவர் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயக்கூடும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். எனவே, தனக்காக குரல் கொடுக்க பலர் வர வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறாராம். 
 
தனக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும்போது, தான் கேட்பாரற்று போய்விட கூடாது என நினைக்கும் கருணாஸ், அரசியலில் தனக்கான ஆதரவு வளையத்தை அதிகரித்து வருகிறார். இதன் மூலம், அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடவும் சில துடுப்புசீட்டுகளை கணக்கில் வைத்துள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments