Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
, திங்கள், 15 அக்டோபர் 2018 (08:39 IST)
தமிழகத்தின் உள்மாவட்ட பகுதிகலில் கனமழை பொழுயும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரத்திற்கு முன்பு கனமழை பெய்யும் என்று ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் வாங்கப்பட்டது. 
 
தற்போது ஒடிசா மாநிலம் முதல் தென் தமிழகம் வரை நிலப்பரப்பின் மேலே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் இதில் அடங்கும். மேலும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி!! ஆன்லைனில் மது விற்பனை: அரசின் அதிரடி திட்டம்