Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதியை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கிறார் ஸ்டாலின்: அழகிரியை இழுத்து விடும் மதுசூதனன்!

கருணாநிதியை வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கிறார் ஸ்டாலின்: அழகிரியை இழுத்து விடும் மதுசூதனன்!

Advertiesment
கருணாநிதி
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (09:47 IST)
திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வீட்டிற்குள் பூட்டி வைத்திருக்கிறார் என அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் கடுமையாக சாடினார்.


 
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் முக்கிய பிரச்சார பொருளாக மாறியிருப்பது ஜெயலலிதாவின் மரணம்.
 
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் ஓபிஎஸ்-ஐ இணைக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் அணி சார்பாக ஆர்கே நகரில் போட்டியிடும் மதுசூதனன் பேசும் போது ஸ்டாலினின் குற்றச்சாட்டு தேவையில்லாத குற்றச்சாட்டு என்றார்.
 
மேலும் தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக கூறிய மதுசூதனன்,  கருணாநிதியை அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதை நான் சொல்லவில்லை. அவரது சகோதரர் அழகிரிதான் சொல்கிறார். இதற்கு ஸ்டாலின் சொல்லும் பதில் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்கே. நகர் கலவர பூமியானது; மண்டை உடைப்பு: போலீஸ் குவிப்பு! (வீடியோ இணைப்பு)