Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: நீதிமன்றத்திற்கு வரும் வழியில் கருக்கா வினோத் முழக்கம்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (13:16 IST)
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் கருக்கா வினோத் நீதிமன்றத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர்  ரவி தங்கி இருக்கும்  கவர்னர் மாளிகையை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார் என்பது. அவரிடம் தீவிர விசாரணை செய்வதில் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவலர்கள் அவரை அழைத்து வந்த போது பத்திரிகையாளரை நோக்கி அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சரமாரியாக முழக்கமிட்டார். 
 
இதனை அடுத்து கருக்கா வினோத்தை காவலில் எடுப்பதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர்.  இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நீட் தேர்விற்கும் கருக்கா வினோத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும்  போலீசாரால் ஜோடனை செய்யப்பட்டு அழைத்துவரப்பட்டு இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments