Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!
, ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (11:00 IST)
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக மனு தாக்கல் செய்து வருகிறார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுக்களும்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. நாளைய விசாரணையிலும் சென்னை ஹைகோர்ட் கேட்ட அதே கேள்வி கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சராக இருக்கும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று கூறப்படும் நிலையில் தமிழக அரசு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்துள்ளது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு  இல்லை என வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 37 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!