Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்ட காங்கிரஸ் முடிவு?

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (13:01 IST)
வரும் 2024 ஆம் ஆண்டு  நடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள  தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில்  சில கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தொகுதிவாரியாக தங்கள் கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டிகளை தேர்வு செய்து, தயார் படுத்தி வருகிறது.

இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்ட மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதற்காக ஆன்லைன் வாயிலாக நிதிகோரும் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளாதாகத் தெரிகிறது.

கட்சியின் நிதி இருப்பைக் கணிசமாக  அதிகரிக்கும் முயற்சி இதுவென காங்கிரஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே தொடர்ந்து இருமுறை காங்கிரஸ் 2 முறை தொடர்ச்சியாக தோல்வியுற்றதால் அடுத்த தேர்தலில் பாஜக வீழ்த்த்த கூட்டணிகளுடன் சேர்ந்து திட்டம் வகுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments