Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும்: ரஜினிக்கு கார்த்திக் சிதம்பரம் அட்வைஸ்!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (15:45 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து ரஜினி சொன்னது எதுவும் தெளிவாக புரியவில்லை என்றும் அவர் சொல்வதைத் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றும் முன்னாள் நிதி அமைச்சரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான ப சிதம்பரம் அவர்களின் மகனும் சிவகங்கை தொகுதியில் எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சிதம்பரம் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் ’குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து ரஜினிகந்த்த்ஹின் கருத்து தெளிவாக இல்லை என்றும், அவர் இந்த சட்டத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கின்றாரா? என்பதை சொல்லவில்லை இந்த சட்டத்திற்கு அவர் ஆதரவு உண்டா? அல்லது இல்லையா? என்பதை தெளிவாகச் சொன்னால் பலருக்கு குழப்பம் தீரும் என்றும் கூறியுள்ளார்
 
முன்னதாக குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியதாவது: எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரு ஒற்றுமையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் விமர்சனம் செய்யாது அரசியல்வாதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments