சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும்: ரஜினிக்கு கார்த்திக் சிதம்பரம் அட்வைஸ்!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (15:45 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து ரஜினி சொன்னது எதுவும் தெளிவாக புரியவில்லை என்றும் அவர் சொல்வதைத் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றும் முன்னாள் நிதி அமைச்சரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான ப சிதம்பரம் அவர்களின் மகனும் சிவகங்கை தொகுதியில் எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சிதம்பரம் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் ’குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து ரஜினிகந்த்த்ஹின் கருத்து தெளிவாக இல்லை என்றும், அவர் இந்த சட்டத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கின்றாரா? என்பதை சொல்லவில்லை இந்த சட்டத்திற்கு அவர் ஆதரவு உண்டா? அல்லது இல்லையா? என்பதை தெளிவாகச் சொன்னால் பலருக்கு குழப்பம் தீரும் என்றும் கூறியுள்ளார்
 
முன்னதாக குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியதாவது: எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரு ஒற்றுமையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் விமர்சனம் செய்யாது அரசியல்வாதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments