Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும்: ரஜினிக்கு கார்த்திக் சிதம்பரம் அட்வைஸ்!

சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும்: ரஜினிக்கு கார்த்திக் சிதம்பரம் அட்வைஸ்!
, ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (15:45 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து ரஜினி சொன்னது எதுவும் தெளிவாக புரியவில்லை என்றும் அவர் சொல்வதைத் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றும் முன்னாள் நிதி அமைச்சரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான ப சிதம்பரம் அவர்களின் மகனும் சிவகங்கை தொகுதியில் எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சிதம்பரம் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் ’குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து ரஜினிகந்த்த்ஹின் கருத்து தெளிவாக இல்லை என்றும், அவர் இந்த சட்டத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கின்றாரா? என்பதை சொல்லவில்லை இந்த சட்டத்திற்கு அவர் ஆதரவு உண்டா? அல்லது இல்லையா? என்பதை தெளிவாகச் சொன்னால் பலருக்கு குழப்பம் தீரும் என்றும் கூறியுள்ளார்
 
webdunia
முன்னதாக குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியதாவது: எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரு ஒற்றுமையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் விமர்சனம் செய்யாது அரசியல்வாதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் உருவ பொம்மைகளை எரியுங்கள்... பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - மோடி